செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

Home » »

உலகம்

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:



''உலகம், இறை விசுவாசிகளுக்கு சிறைச்சாலையாகும். இறை மறுப்பாளர்களுக்கு சொர்க்கம் ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 470)





இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்கள் என் தோள் பட்டையைப் பிடித்துக் கொண்டு, ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீர் இந்த உலகில் இருந்து கொள்'' என்று கூறினார்கள். ''நீர் மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல் நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.'' (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 471)



நுஹ்மான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:



''உலகத்தின் பயனை மக்கள் பெற்றுக் கொண்டது குறித்து நினைவு கூர்ந்த உமர்(ரலி) அவர்கள், அன்றைய நாளில் பசி காரணமாக சாய்ந்த நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கண்டுள்ளேன். அவர்கள் தன் வயிற்றை நிரப்பிட மட்டமான பேரீத்தம் பழத்தைக் கூட பெற்றுக் கொண்டதில்லை'' என்று கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 473)



அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நீங்கள் சொத்துக்களை (கவனத்தில்) எடுத்துக் கொள்ளாதீர்கள். இதன் மூலம் நீங்கள் இவ்வுலகில் பேராசைக்காரர்களாகி விடுவீர்;கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 479)



''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)





'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

____________ _________ _________ _______


NANDRI: SATHYAPATHAI GROUP

Wednesday, January 13, 2010

VINADI VINA

VINADI VINA

clickhere

Tuesday, November 10, 2009

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

(அபூஸைத் என்ற) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

'மறுமையில் ஒருவர் அழைத்து வரப்பட்டு, நரகிலும் போடப்படுவார். அப்போது அவரின் வயிற்றுக் குடல்கள் சரிந்து விடும். அவர் அந்த நிலையிலேயே கழுதை செக்கைச் சுற்றுவது போல் சுற்றுவார். அவரிடம் நரகவாசிகள் அனைவரும் வந்து, இன்னாரே! உனக்கு என்ன நேர்ந்தது? நீ நல்லதை ஏவி, தீயதை விட்டும் தடுத்துக் கொண்டு இருந்தீர்தானே? என்று கூறுவார்கள். அதற்கு அவர், ஆம் நல்லதை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்ய வில்லை. தீயதை விட்டும் தடுத்தேன். ஆனால் அந்த தீமைகளை நான் செய்தேன்'' என்று கூறுவார் என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 198)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும் 1) பேசினால் பொய் பேசுவான் 2) வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான் 3) அவனை நம்பினால் மோசடி செய்வான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 199)


ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். அநீதம் என்பது, மறுமை நாளின் இருள்களில் உள்ளதாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். கஞ்சத்தனம் தான், உங்களுக்கு முன் இருந்தவர்களை அழித்தது. மேலும் அது (கொலை மூலம்) இரத்தங்களை ஓட்டிடவும், தடுக்கப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை தூண்டியது.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 203)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
Share this article :

கருத்துரையிடுக

 
Copyright © 2011. இஸ்லாமிய வரலாறு . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template modify by Creating Website. Inspired from CBS News